Disqus Shortname

திருப்புலிவனத்தில் பம்பு ஸ்டவ் வெடித்து பெண் பலி

உத்தரமேரூர் செப்,30
உத்தரமேரூர் அடுத்த திருப்புலிவனம் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர்  வீரபத்திரன் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார்.  இவரது மனைவி ராணி (50) கடந்த 23.ம் தேதி புதன்கிழமையன்று அன்று காலை சமையல் செய்வதற்க்காக பம்பு ஸ்டவ் பத்த வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக பம்பு ஸ்டவ் வெடித்தது.  இதில் ராணி பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக செங்கை அரசு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். திங்கட்கிழமையன்று 30 ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உத்தரமேரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments