Disqus Shortname

பகுதி நேர நியாயவிலை கடை திறப்பு

உத்தரமேரூர் அக்,16
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் உச்சிகொல்லைமேடு கிராமத்தில்
புதன்கிழமையன்று பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா  நடைபெற்றது. ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்  கே.பிரகாஷ்பாபு, வயலக்காவூர் கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள் திருமுக்கூடல் ஒன்றியக்குழு  உறுப்பினர் டி.எம்.சடையாண்டி முன்னிலை வகித்தனர். உச்சிகொல்லைமேடு ஊராட்சி மன்றத்தலைவர் தமிழ்மொழி வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்  பகுதி நேர நியாயவிலை கடையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். காஞ்சி மாவ்டட எம்.ஜீ.ஆர்.மன்ற செயலாளர் லயன்.வெடி.சந்திரன், காவாம்பயிர் ஒன்றிய குழு
உறுப்பினர்  ஆர்.ஏகாம்பரம், ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.குணசேகரன், தொகுதி செயளாளர் கே.ஆர். தருமன், ஓ.வி.வரதன், ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன்,  தண்டரை தணிகைவேல் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டுறவு கடன் சங்க செயளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments