Disqus Shortname

திருப்புலிவனத்தில் அம்மா திட்ட முகாம்

உத்தரமேரூர் அக்,18

உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று
ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் கோவில் மைதானத்தில் அம்மா திட்ட முகாம் நடந்தது.
வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார். ஒன்றியக்குழு துணைத்தலைவர்
அ..ரவிசங்கர் முன்னிலை வகித்தார். முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவசவீட்டுமனைபட்டா, உழவர் பாதுகாப்பு அட்டை, புதிய குடும்ப அட்டைகளுக்கு உண்டான உத்தரவுகளை உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி வழங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமுக்கூடல் டி.எம்.சடையாண்டி, காவாம்பயிர் ஒன்றிய குழு உறுப்பினர் ஏகாம்பரம் களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம் மேற்கு  ஒன்றியம் அம்மா பேரவை செயலாளர் பி.வில்வபதி, திருப்புலிவனம் காலணி அ.தி.மு.க கிளை செயலாளர்
டி.சி.கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மண்டல துணை வட்டாட்சியர்
கலைமணி நன்றி கூறினார்.

No comments