ஜெயலலிதா பிரதமராவது உறுதி டாக்டர் வா.மைத்ரேயன் பேச்சு.
நடைபெற
உள்ள பாராளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி. காங்கிரஸ் கட்சி மாயாவதி கட்சி
யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்றும் தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா தான்
பிரதமராகப்போவது உறுதி என்று மாநிலங்களவை குழுத்தலைவரும், நாடாளுமன்ற (தனி)
பொருப்பாளருமான டாக்டர் வா.மைத்ரேயன் பேசினார். உத்தரமேரூர் பேரூந்து
நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று அ.தி.மு.க. 42-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
நடைபெற்றது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர்
தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து
உரையாற்றினார். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர்
அ.ரவிசங்கர் வரவேற்றார்கள் தலைமை கழக பேச்சாளர் திருநாகேஸ்வரம் ஜலீல்
சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் டாக்டர் வா.மைத்ரேயன் பேசியது- நடைபெற
உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா தயாராக உள்ளார். எந்த
கட்சியினருடனும் தேர்தலில் கூட்டணிவைக்க அம்மா கூறியதில்லை, அ.தி.மு.க.
தனித்து நின்று 40 தொகுதிகளையும் கைப்பற்ற போவது உறுதி. அ.தி.மு.க
நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொது மக்களிடம் தமிழக முதல்வர்
அம்மா ஜெயலலிதா செய்துள்ள சாதனைகளை எடுத்து கூறி இரட்டை இலைக்கு வாக்கு
சேகரிக்க வேண்டும். அம்மா எந்த வேட்பாளரை தேர்தலில் போட்டியிட வைத்தாலும்
அவர் வெற்றி பெற பாடுபட வேண்டும் ஆங்கில நாளிதழ் ஒன்று 543 தொகுதி கருத்து
கணிப்பு வெளியிட்டுள்ளனர். பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி
கட்சிகள் தோற்கும். குறைந்த பட்சம் 117 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி
பெறலாம், ராகுல்காந்தி சோனியாகாந்தி தீவிர பிரச்சாரம் செய்தாலும் காங்கிரஸ்
கட்சி ஆட்சி அமைக்க முடியாது நரேந்திரமோடி பி.ஜே.பி.க்கு 116 தொகுதிகள்
கிடைக்கலாம் அடுத்த படியாக உத்தரபிரதேச மாயாவதிக்கு 22 தொகுதிகள் தான்
கிடைக்கும் மம்தா பானர்ஜிக்கு 23 தொகுதிகள் கிடைக்கலாம். அ.தி.மு.க.விற்கு
23 தொகுதிகள் கிடைக்கலாம் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அனால்
தி.மு.க கூட்டணிக்கு 5 தொகுதிகள் கூட கிடைக்காது, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு
தொகுதி கிடைக்கலாம். ஆனால் மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு
டெப்பாசிட் கூட கிடைக்காது என்று ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
மாயாவதிக்கு ஆங்கிலம் பேச தெரியாது மம்தா பானர்ஜியை கம்பூனிஸ்ட் கட்சி
ஆதரிக்காது இந்தி, ஆங்கிலம் உட்பட 6 மொழிகளிலும் தெளிவாக பேசக்கூடிய தமிழக
முதல்வர் அம்மா ஜெயலலிதா மட்டும் தான் இந்திய நாட்டின் பிரதமரானால் தமிழ்
நாட்டிற்கு தேவையான காவிரி நீர் பிரச்சனை, முல்லைபெரியார், ஈழதமிழர்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்றும் அம்மா அ.தி.மு.கவில் 1.5 கோடி உறுப்பினர்கள் சேர்த்துள்ளார் என்று பேசினார். டாக்டர் வா.மைத்ரேயன். இக்கூட்டதில் காஞ்சி சட்ட மன்ற
உறுப்பினர் வி.சோமசுந்தரம், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு.
மாவட்ட இளைஞர் பாசறை செயலர் டி.சந்திரமௌலி ஒன்றிய குழு உறுப்பினர்
தங்க.பஞ்சாட்சரம், பி.வில்வபதி தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்ட
அம்மா பேரவை தலைவர் ஒ.வி.வரதன் தண்டரைதணிகைவேல், கே.தயாளன், எம்.கே.பி.வேலு
பொ.சசிக்குமார். சத்யாநரசிம்மன், வி.பி.சதிஷ், பி.குணா, கே.சி.எம்.விஜய்,
நீரடி. என்.பி.தினகரன், பூந்தண்டலம் ரேவதிராஜேந்திரன்,
திருப்புலிவனம் டி.சி.கிருஷ்ணன்,ஏ.வெரோனிகா அமலோற்பவராஜ் உட்பட பலர்
பங்கேற்றனர். பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன் நன்றி கூறினார்.
No comments