Disqus Shortname

பாராளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் மல்லை சத்யா போட்டி உத்தரமேரூர் செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு.

உத்தரமேரூர் அக்,16

பாராளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் மல்லை சத்யா போட்டியிட உத்தரமேரூர் செயல் வீரர்கள் கூட்டத்தில் முடிவு செய்தனர். உத்தரமேரூரில் செவ்வாய்கிழமையன்று மதிமுக சார்பில் உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி பற்றி பாராளுமன்ற  தேர்தல்  குறித்து  கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் க.சோமு தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் ஜி.கருணாகரன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் கோ.ராதா மாவட்ட பொருளாளர் கே.பி.ராமலிங்கம் குரோம்பேட்டை ஏ.நாசர், கலைவாணி மாரிமுத்து முன்னிலை வகித்தனர் வாலாஜாபாத்  ஒன்றிய செயலர் ஹரிகிருஷ்ணன், கிளை செயலர் ஆர்.சி.பிரகாஷ் உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் மேற்கு ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பாராளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மல்லை சி.இ.சத்யா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்று பேசினார்கள். மாநில துணை பொதுச் செயலாளர் மல்லை சி.இ.சத்யா பேசியது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் நீக்கல் குறித்து மதிமுக வினர் பம்பரமாக  சுழன்று பணியாற்ற வேண்டும் 2 ஞாயிற்றுகிழமைகளில் பூத்துகளில்  வாக்காளர் பட்டியலை சரி பார்த்து 18 வயது நிரம்பியர்களை சேர்க்க வேண்டும் வார்டு தோறும் கிளை கழக பெயர் பலகை  வைத்தும் கட்சி கொடியேற்ற வேண்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பாலாற்றின் குறுக்கே தடுப்பனை கட்ட வேண்டும். மாமல்லபுரம் திருப்போரூர் ஆகிய இடங்களில் தொல் பொருள் அகழ்ஆராயிச்சியினர் தடை உத்தரவை திரும்ப பெற்றது போல் உத்தரமேரூர் பகுதியிலும் தடை உத்தரவை திரும்ப பெற போராட்டங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு மதிமுக கழக நிர்வாகிகள் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற பாடுபட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பிரதிநிதி க.சங்கரன் நன்றி கூறினார்.

No comments