Disqus Shortname

சுவாமி விவேகானந்தர் சர்வ சமய ஆன்மீகம் மக்கள் நல சேவாசங்கம் துவக்கம்

உத்தரமேரூர் அக்,8
உத்தரமேரூர்  தாலுக்கா கடல்மங்கலம் ஊராட்சி எல்லன்நகரில் சுவாமி
விவேகானந்தர்  சர்வ சமய ஆன்மீக மற்றும் மக்கள் நல சேவா சங்கம் துவக்க
விழா அண்மையில் நடந்தது. நியூ டெல்லி அஷோக் லைலேண்ட் கம்பெனியில் பணியாற்றும் பொறியாளரும் சங்க தலைவருமான  டி.வடிவேல் சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். எல்லன் நகர் சங்க செயலாளர் எ.பாபு வரவேற்றார். மல்லியங்கரணை ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் பள்ளி செயலாளர் சுவாமி அமூர்தானந்தா மகராஜ் குத்து விளக்கேற்றி இரவு பள்ளியை துவக்கி வைத்து வாழ்த்தி பேசினார். கடல்மங்கலம் ஊராட்சி  மன்றத்தலைவர் தே.வீராசாமி முன்னிலை வகித்தார். எல்.ஐ-சி.சங்க பொருளாளர் பா.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

No comments