Disqus Shortname

ஒரக்காட்பேட்டையில் 18 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் கறவை பசுமாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் விழா

உத்தரமேரூர் அக்-23

        உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், ஒரக்காட்டுபேட்டையில் ரூ.16 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கறவை பசுமாடுகளும், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 850
ரூபாய் மதிப்பில் வெள்ளாடுகளும் வழங்கும் விழா அண்மையில் நடந்தது.
ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர்.  ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். அரும்புலியூர் கால்நடைத்துறை மருத்துவர் வனிதா வரவேற்றார்.
கால்நடைத்துறை உதவி இயக்குநர் ராஜன் சி.ஆண்டனி கால்நடைகள் பராமரிப்பு பற்றி விளக்கி கூறினார். உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி மாவட்ட ஆட்சியர்(கூடுதல் பொறுப்பு) சம்பத்குமார் ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லா கறவை பசுமாடுகள், வெள்ளாடுகள் வழங்கினார்கள்.  இவ்விழாவில் உத்தரமேரூர் வட்டாட்சியர் சாவித்ரி, அதிமுக ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஓ.வி.வரதன்,  தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், திருவந்தவார் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். புத்தாகரம் கால்நடை மருத்துவர் இ.சாந்தி நன்றி கூறினார்.

No comments