Disqus Shortname

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் முனுசாமி தகவல்

உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்படும்: சட்டசபையில் அமைச்சர் முனுசாமி தகவல்
சென்னை, அக்.30–
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது உத்திரமேரூர் அ.தி.மு.க. உறுப்பினர் கணேசன், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை 2 ஆக பிரிக்க அரசு ஆவண செய்யுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் கே.பி.முனுசாமி அளித்த பதில் வருமாறு:–
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தை, உத்திரமேரூர், சாலவாக்கம் என்று 2 ஒன்றியங்களாக பிரிக்க வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். இது அரசின் பரிசீலனையில் உள்ளது.புரட்சித்தலைவி அம்மா ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இது தவிர திருத்துறைப் பூண்டி, இளையான்குடி, குத்தாலம், உடுமலை ஆகிய ஒன்றியங்களும் பிரிக்கப்படுமா? என்று அந்த பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்
இதற்கு பதில் அளித்த அமைச்சர், "கலெக்டர் பரிந்துரை அரசுக்கு வந்தால் அதுபற்றி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments