Disqus Shortname

மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியின் இலவச தொழிற் பயிற்சி துவக்க விழா

உத்தரமேரூர் அக்,11
உத்தரமேரூர் ஒன்றியம் குண்ணவாக்கம் ஊராட்சியில் இலவச தொழிற் பயிற்சி துவக்கவிழா வியாழக்கிழமையன்று நடைபெற்றது. மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியின் சமுதாய மேம்பாட்டு திட்டமும் புதுவாழ்வு திட்டமும் இணைந்து இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் இ.பெருமாள் தலைமை தாங்கினார். புதுவாழ்வு திட்ட பாலேஸ்வரம் பகுதி அணித்தலைவர் ஜெ.மணிகண்டன் வரவேற்றார். சமுதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.இராஜேந்திரன் பயிற்சியினை துவக்கிவைத்து திட்டத்தின் விளக்கவுரையாற்றினார். விழாவின் சிறப்பு அழைப்பாளராக புதுவாழ்வு திட்ட
மாவட்ட மேலாளர் பி.தனசேகர் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரியின் முதல்வர் கே.ராஜா  கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார். சமுதாய மேம்பாட்டு திட்ட உதவி அலுவலர் தீபக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி கணித ஆசிரியர் ஜி.ஜானகிராமன் நன்றி கூறினார்.

No comments