Disqus Shortname

தமிழ முதல்வரை செங்கோட்டைக்கு பாரத பிரமராக அனுப்பவேண்டும் வா.மைத்ரேயன் பேச்சு

உத்தரமேரூர் அக்,02
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை செங்கோட்டைக்கு பாரத பிரதமராக அனுப்ப வேண்டும் என்று கூறினார். வா.மைத்ரேயன் காஞ்சிபுரம் நாடாளு மன்ற (தனி)  தொகுதி  உத்தரமேரூர் சட்ட மன்ற மன்ற தொகுதி செயல் வீரர்கள் வீராங்கணைகள் ஆலோசனை  கூட்டம் இந்திராணி, திருமண மண்டபத்தில் புதன்கிழமையன்று நடந்தது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார்  உத்தரமேரூர் மேற்கு, கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர் உத்தரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் இரா.கமலக்கண்ணன், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் என்.எம்.வரதராஜிலு வரவேற்றனர். கழக மருத்துவ அணி தலைவரும், நாடாளுமன்ற (தனி) தொகுதி பொறுப்பாளருமான வா.மைத்ரேயன் பேசியது. தமிழக முதல்வர் அம்மாவை செங்கோட்டைக்கு பாரத பிரதமராக அனுப்பி அ.தி.மு.க கொடி பறக்க வேண்டும், இந்த மாதத்திற்குள் 6,20,27 தேதிகளில்  வீடு வீடாக  சென்று  வாக்களர் பட்டியலில் நம் கட்சியினர் பெயர் உள்ளதா என்றும்  பெயர் சேர்த்தல், இடம் மாற்றம் ஆகியவைகளை கழகத்தினர் சரி  பார்க்க வேண்டும், கழக  தொண்டர்கள் இரவு பகல் பாராது அயராது  உழைத்து காஞ்சி மாவட்டத்தில் பாராளுமன்ற தொகுதி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெற வேண்டும்  கிராமங்களிலும், வார்டுகளிலும் அ.தி.மு.க வினர் குழு அமைத்து பணியாற்ற வேண்டும் என்றார் வா.மைத்ரேயன்,  இக்கூட்டத்தில் காஞ்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் சா.இராஜேந்திரன், சி.என்.சந்திரன், திருவந்தவார் முருகன், எஸ்.எஸ்.சத்யா, களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம் ஒன்றிய குழு துணைத்தலைவர் அ.ரவிசங்கர், தண்டரை தணிகைவேல், குண்ணவாக்கம் ஆர்.கிருண்ணமூர்த்தி டி.சந்திரமௌலி, எம்.கே.பி.வேலு, மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், பி.வில்வபதி அ.பி.சத்திரம் ஜி.பெருமாள் புலியூர் தலைவர் பழனி, மாவட்ட கழு உறுப்பினர் சுமதி குணசீலன், பொ.சசிகுமார், சதிஷ், கே,தயாளன், இ.தயாளன், நந்தகுமார், உட்பட பலர் கலந்து கொண்டனர். பேரூர் கழக செயலாளர் கே.லட்சுமணன் நன்றி கூறினார்.

No comments