உத்தரமேரூரில் மக்கள் நீதி மன்றம் கூட்டம்
உத்தரமேரூரில்
சனிக்கிழமையன்று ஐ,ஓ,பி,வங்கிக்கான மக்கள் நீதி மன்ற கூட்டம் மக்கள் நீதி
மன்றத்தில் நடைபெற்றது. உத்தரமேரூர் சட்ட உதவி தலைவரும், மாவட்ட உரிமையியல்
நீதி மன்ற நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள்
மாவட்ட நீதிபதிகள் டி,.துரைராஜ், ஜி.தர்மராஜ் ஆகியோர் முன்னிலையில்
நடைபெற்ற கூட்டத்தில் 105 வழக்குகள் முடிவுற்றது. ரூ.75 லட்சம் உத்தரவு
வழங்கப்பட்டு 7 லட்சம் பணம் வசூலிக்கப்பட்டது. இதை வட்ட சட்ட பணிகள்
குழுவுடன் உதவியாளர் கே.இராமலிங்கம் ஒருங்கிணைந்து செய்திருந்தார்.
No comments