எளிய அறிவியல் பரிசோதனை பயிற்சி
உத்தரமேரூர் அக்,06
உத்தரமேரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார
வளமையம் மூலம் சனிக்கிழமையன்று எளிய அறிவியல்
பரிசோதனைகள் என்ற தலைப்பில் தொடக்கநிலை ஆசியர்களுக்கு
குறுவளமைய கருத்தாய்வு
மையங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியானது மாணவர்களை
எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும்
வகையில் அறிவியல்
கண்டுபிடிப்பாளர்களாகவும்,
ஆராய்ச்சியாளர்களாகவும் மாற்றம் ஏற்படுவதில்
இப்பயிற்சி அவசியம்
என்று வட்டார வளமைய மேற்பார்வையாளர்
ஏ.,ராஜேந்திரன்
பயிற்சியை துவக்கி வைத்து பேசினார்.
மாவட்ட கூடுதல்
முதன்மைக்கல்வி அலுவலர் பி.அமுதவல்லி மாவட்ட
பயிற்சி ஒருங்கிணைப்பாளர்
சசிக்குமார் கலந்து கொண்டு பயிற்சியில்
வழங்கப்பட்டது 30 க்கும் மேற்பட்ட எளிய அறிவியல் பரிசோதனைகளை
எவ்வாறு மாணவர்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது என்பது பற்றியும்,
ஆசிரியர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
No comments