Disqus Shortname

உத்தரமேரூரில் சட்ட விழிப்புணர்வு முகாம்

உத்தரமேரூர் அக்,17
உத்தரமேரூர் வட்ட சட்டப்பணிகள் குழு சமூக நலத்துறை மற்றும் அரசு ஊழியர் சங்கமும் இணைந்து கம்மாளம்பூண்டி கிராமம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமையன்று சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. நீதிபதி எம். ஜெய்சங்கர் தலைமை தாங்கி சட்ட விழிப்புணர்வு பற்றி உரையாற்றினார். வழக்கறிஞர்கள் என்.ஆறுமுகம், கே.சண்முகசுந்தரம், டி,ஆதிகேசவன், டி.கிருஷ்ணன், ஏ.சந்தானகிருஷ்ணன் டி.கண்ணபிரான், கே.நந்தகோபால் ஆகியோர் சட்ட விதிகள் பற்றி பேசினார்கள்  கம்பாளம்பூண்டி ஊராட்சி மன்றத்தலைவர் மாரி வரவேற்றார். உபதலைவர் கோதண்டராமன் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வட்ட, சட்ட பணியின் குழுவின் நிர்வாக உதவியாளர் கே.ராமலிங்கம் செய்திருந்தார்.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான  கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

No comments