உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் முதல் மெய்யூர்ரோடை கிராமம் வரை ரூ.170 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
உத்திரமேரூர் 28/05/2023
உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் கிராமம் முதல் மெய்யூர்ரோடை
கிராமம் வரை ரூ.170 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்க
விழா நேற்று நடைப்பெற்றது. விழாவில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர்
டி.குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் சிவராமன்,
ஒன்றிய பெருளாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி
மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி
திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு
ரூ.170 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி துவக்கி வைத்து பொது
மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் பணியினை தரமானதாக
விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதி நிதிகள்
கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments