Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மண்எண்ணை ஊற்றி மனைவி எரிப்பு: கணவர் கைது

உத்திரமேரூர், அக். 10-

உத்திரமேரூர் அருகே உள்ள மங்களம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தனலட்சுமி (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 19.8.13 அன்று தனலட்சுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி உடல் கருகிய அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமியை கணவர் முருகனே மண்எண்ணை ஊற்றி எரித்தது தெரிந்தது. தனலட்சுமி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், "இதுவரை வாக்களார் அட்டை, குடும்ப அட்டை வாங்காமல் உள்ளோம். இது தொடர்பாக கணவருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அவர் எனது உடலில் மண்எண்ணை ஊற்றி கொளுத்தினார். இதனை வெளியில் சொன்னால் 2 மகன்களையும் கொன்று விடுவதாக மிரட்டினார். இதனால் உண்மையை சொல்லாமல் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தேன்'' என்று கூறி உள்ளார். இதையடுத்து முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

No comments