Disqus Shortname

கள்ள சாராயம் விற்பனை : மாவட்ட கலெக்டரிடம் புகார்

உத்தரமேரூர்அக்,08:
 கட்டியாம்பந்தல் கிராமத்தில், கள்ள சாராயம் விற்பதை தடுக்க வேண்டும் என, காஞ்சிபரம் மாவட்ட கலெக்டரிடம், ஊராட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, கட்டியாம்பந்தல் கிராமம். இங்கு, 600 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கள்ள சாராயம் மற்றும் பாண்டிசேரியில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்கள் வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஊராட்சி தலைவர் ராஜா, கலெக்டரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது, கட்டியாம்பந்தல் ஊராட்சியில், கள்ள சாராயம் மற்றும் பாண்டிசேரியில் இருந்து, மது பாட்டில்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments