Disqus Shortname

மேல்தூளி கிராமத்தில் 4 மாதங்களாக குடிநீரின்றி பொதுமக்கள் தவிப்பு

உத்திரமேரூர், அக்,24
மேல்தூளி கிராமம் 5வது வார்டில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர்.உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் மேல்தூளி ஊராட்சி மேல்தூளி கிராமத்தில் 5வது வார்டுக்குட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் 80க்கு மேற்பட்ட வீடுகளில், சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள்  வசிக்கின்றனர்.இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களாக தண்ணீர் வருவதில்லை. குடிநீர் தேவைக்காக அப்பகுதி மக்கள் பக்கத்து தெருக்களுக்கும், பக்கத்து கிராமங்களுக்கும் சென்று தண்ணீர் கொண்டு வருகின்றனர். அங்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை.இதனால், இங்கு வசிக்கும் மக்கள் ஊராட்சி தலைவர் அரிகிருஷ்ணனிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கிராம சபை கூட்டத்துக்கும் எங்களை அனுமதிக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே விரைவில்  குடிநீர் குழாயை சீரமைத்து தர வேண்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,

No comments