போதையில் தகராறு கூலி தொழிலாளிக்கு இரும்பு கம்பி அடி: 2 பேர் கைது
உத்தரமேரூர் அக்,16
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் அந்த டாஸ்மாக்கில் பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ் (31), திருப்புலிவனத்தை சேர்ந்த பலராமன் (37), அரிகிருஷ்ணன் (36) ஆகிய 3 பேரும் மது அருதி கொண்டிருந்தனர்.அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் கடையிலிருந்து வெளியேறினர். ஆனைப்பள்ளம் கிராமம் அருகே வந்தபோது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பலராமனும், அரிகிருஷ்ணனும் சேர்ந்து சுரேஷை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். பின்னர் பலராமனும், அரிகிருஷ்ணனும் அங்கிருந்து தப்பியோடினர்.
அக்கம்பக்கத்தினர் சுரேஷை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின் பேரில் உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும், தலைமறைவாக இருந்த பலராமன், அரிகிருஷ்ணனை கைது செய்து, உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
No comments