Disqus Shortname

உத்திரமேரூர் அருகே இரண்டு வீடுகளில் தீ விபத்து, ஆட்டு கொட்டகையில் தீப்பற்றி 20 ஆடுகள் தீயில் கருகியது

உத்திரமேரூர் 

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள இருளர் காலனி பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் 33 இவர் தனது குடிசை வீடு அருகே ஆட்டு கொட்டகை அமைத்து அதில் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை இவர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் இவர் வீட்டின் அருகே இருந்த பொதுக் குழாயில் இருந்த மின் மோட்டார் ஒயரில் மின் கசிவு ஏற்ப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜ்குமாரின் குடிசை வீட்டில் தீ பிடித்து எரிய துவங்கியது. தீயானது காற்றில் மல மல வென பரவி ஆட்டுக் கொட்டகையும் அருகே இருந்த செந்தாமரை என்பவரது குடிசை வீட்டிலும் தீப்பிடித்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள்ளாக தீ பரவி 2 குடிசைகள் மற்றும் ஆட்டுக் கொட்டகை முழுவதும் தீக்கிரையானது. இந்த தீ விபத்தில் 2 குடிசைகள் எரிந்தது மட்டுமின்றி 20 ஆடுகள் தீயில் கருகியது. இதில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments