உத்தரமேரூரில் பட்டா மாற்றம் சிறப்பு முகாமில் 521 மனுக்கள் ஏற்பு
உத்தரமேரூர் அக்,24
உத்தரமேரூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில்
வியாழக்கிழமையன்று பட்டா மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட
வருவாய் அலுவலர் சம்பத்குமார், வருவாய் கோட்ட அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் வட்டாட்சியர் சி.சாவித்திரி வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன் தலைமை தாங்கி உடனடி தீர்வாக 3 மனுக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். உத்தரமேரூர், திருப்புலிவனம், களியாம்பூண்டி சாலவாக்கம், அரும்புலியூர், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 521 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 444 பட்டா மாறுதல் கோரி வழங்கப்பட்டுள்ள மனுக்களை சரிபார்த்து முழுபட்டா 08.11.2013-ம் தேதி அன்றும், உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்படும் நாள் 23.11.2013-ம் தேதி வழங்கப்படும் என்று வட்டாட்சியர் சி.சாவித்திரி தெரிவித்தார். மண்டல துணை வட்டாட்சியர் கலைமணி நன்றி கூறினார்.
உத்தரமேரூர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில்
வியாழக்கிழமையன்று பட்டா மாற்றம் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட
வருவாய் அலுவலர் சம்பத்குமார், வருவாய் கோட்ட அலுவலர் சந்திரன் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் வட்டாட்சியர் சி.சாவித்திரி வரவேற்றார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கே.பாஸ்கரன் தலைமை தாங்கி உடனடி தீர்வாக 3 மனுக்களுக்கு பட்டாக்களை வழங்கினார். உத்தரமேரூர், திருப்புலிவனம், களியாம்பூண்டி சாலவாக்கம், அரும்புலியூர், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் இருந்து 521 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 444 பட்டா மாறுதல் கோரி வழங்கப்பட்டுள்ள மனுக்களை சரிபார்த்து முழுபட்டா 08.11.2013-ம் தேதி அன்றும், உட்பிரிவு செய்து பட்டா வழங்கப்படும் நாள் 23.11.2013-ம் தேதி வழங்கப்படும் என்று வட்டாட்சியர் சி.சாவித்திரி தெரிவித்தார். மண்டல துணை வட்டாட்சியர் கலைமணி நன்றி கூறினார்.
No comments