உத்தரமேரூர் ஒன்றியம் காவனுார் புதுச்சேரியில் 8 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் திறப்பு.
உத்தரமேரூர்
மேற்கு ஒன்றியம் காவனுார் புதுச்சேரி கிராமத்தில்
சனிக்கிழமையன்று ரூ.8.15
லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற
அலுவலக புதிய கட்டிடம் திறப்பு
விழா நடந்தது. தொகுதி செயலாளரும்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான
கே.ஆர்.தருமன்
தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன்
துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கழக
செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு வரவேற்றனர்.
உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்
ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து
சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில்
குண்ணவாக்கம்
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பி.வில்வபதி, களியாம்பூண்டி
தங்க.பஞ்சாட்சரம்,
ஒ.வி.வரதன், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி,
பொ.சசிக்குமார், உட்பட
பலர் பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்
செ.மணிமாறன் (வ.ஊ
) நன்றி கூறினார்.
No comments