17 கோடியில் ஒரக்காட்பேட்டை மேம்பாலம் கட்டவும் அரசுகலை அறிவியல் கல்லூரியும் அளித்தவர் தமிழக முதல்வர் எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன், பாராட்டு
உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில்
அ.தி.மு.க.42-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேற்கு ஒன்றிய கழக
செயலாளர். வி.ஆர்.அண்ணாமலை தலைமை தாங்கினார். ஒன்றியக்குழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர், தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன்,
மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஒ.வி.வரதன் வரவேற்றார்கள். கழக மருத்துவ அணி தலைவரும்,
நாடாளுமன்ற (தனி) தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் வா.மைத்ரேயன், தலைமை கழக
பேச்சாளர் திருநாகேஸ்வரம். ஜலீல் சிறப்புரையாற்றினார்கள். காஞ்சிபுரம் மேற்கு
மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத்
பா.கணேசன் முன்னிலை வகித்து பேசியது. தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா நாள்
ஒன்றுக்கு 20 மணி நேரம் தமிழக மக்களின் நலன்களுக்காக உழைத்துகொண்டிருக்கிறார், ஏழை
எளிய மக்களுக்காக எம்.ஜீ.ஆர். அ.தி.மு.க.வை உருவாக்கி தி.மு.க.வை தோற்கடித்தார்.
அவர் விட்டுச்சென்ற அ.தி.மு.க.வை முதல்வர் அம்மா கட்டி காப்பாற்றி 3 முறை
முதல்வராகி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். ஜாதி,
மதஉணர்வுகள் இல்லாத ஒரே கட்சி அ.தி.மு.க.தான் விலையில்லா கறவை பசுமாடுகள்
கன்றுடனும், வெள்ளாடுகள், மிக்சி, கிரைண்டர், பேன், மாணவ மாணவியருக்கு இலவச
மடிகணினி, முதியோருக்கு கூடுதல் உதவிதொகை மாற்றுத்திறாளிகளுக்கு உதவிகள், கணவரால்
கைவிடப்பட்ட பெண்களுக்கு ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அளித்து
வருபவர் முதல்வர். 40 ஆண்டுகளாக உத்தரமேரூர் ஒன்றியத்திற்கு உற்பட்ட
ஓரக்காட்பேட்டை மேம்பாலம் கட்டிதர பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று
முதல்வர் 17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். உத்தரமேரூரில் அரசு கலை அறிவியல்
கல்லூரி உருவாக்கி தந்தவர் அம்மா ஜெயலலிதாதான் என்று கூறினார்எம்.எல்.ஏ.வாலாஜாபாத்
பா.கணேசன். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தரமேரூர் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய கழக
செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை சிறப்பாக செய்திருந்தார்.
No comments