Disqus Shortname

கடனை திருப்பி கொடுக்காததால் வெட்டி கொன்றேன் கைதான ஊழியர் வாக்குமூலம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5AJzTejc1UfmElifxe8HzyQnVUi67AGIjKJSKFLJFmLFWt6-f9h_HSZ0P-1JXri2pDQ8dyHewRYMWlBTAgKFRCyEhNa_9v4EV-x-rJ7O92m_MaMJUZB7NxZRJuGFhezwqlLpJLiInk2Y/s1600/fbf1a338-f8f0-4c30-847a-a102b4d42756_S_secvpf.gif.jpgஉத்திரமேரூர் அக்,11:

காஞ்சிபுரம் அருகே உத்திரமேரூர் வளத்தோட்டம் பாலாற்று மேம்பாலத்துக்கு கீழ் சடலமாக கிடந்த வாலிபர் உத்திரமேரூர் பழைய மருத்துவமனை சாலையை சேர்ந்த பெருமாள்  மகன் சதீஷ்குமார் (25) ஓட்டல் தொழிலாளி என தெரிந்தது.
 இந்நிலையில் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். சதீஷ்குமாருடன் ஓட்டலில் வேலை செய்த சண்முகத்தை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
 இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:
திருத்தணி அடுத்த காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அத்தை வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். அப்போது  சண்முகத்திடம், சதீஷ் ^20,000 பெற்றிருக்கிறார். சதீஷிடம் பணத்தை கேட்டதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதியன்று பணம் தருவதாக கூறினார். இதற்கிடையே 2 பேரை சண்முகம் மறை வில் இருக்கச் செய்தார். சண்முகமும், சதீஷும் மது அருந்தி கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. மறைந்திருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து சதீஷை 8 இடங்களில் வெட்டி கொன்றதாக தெரிவித்தார்.சண்முகத்தின் நண்பர்கள் சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த அருண், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்
சண்முகத்தின் நண்பர்கள் சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த அருண், கார்த்திக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=49208#sthash.okF2haAv.dpuf

No comments