Disqus Shortname

சாலவாக்கம் இந்தியன் வங்கியில் ஏ.டி.எம்.வசதிதேவை

உத்தரமேரூர் அக்-4
        உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் இந்தியன் வங்கி கடந்த 30
ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. 20 கிராமங்களுக்கு ஒரே வங்கியாக இது செயல்படுகிறது. இதனால் தினந்தோறும் பணம் செலுத்துவோர் பணம் எடுப்போர் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இவ்வங்கியில் குறைந்த பட்ச ஊழியர்களே பணியாற்றுகிறார்கள். இதனால் வங்கிக்கு வருபவர்கள் வேலைக்கு செல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இங்கு 100 நாள் வேலை
சம்பளம் வங்கியின் மூலமாக வழங்குவதால் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் ஒரு ஏ.டி.எம் வசதி இருந்தால் பல
ஆயிரம் பேர் நன்மை அடைவார்கள். இதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments