Disqus Shortname

மர்ம காய்ச்சலால் மக்கள் அவதி

உத்தரமேரூர் அக்-3
        உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் இராவுத்தநல்லூரில் கடந்த ஒரு மாதகாலமாக பொது மக்கள் மர்ம காய்ச்சலால் அவதிக்குட்பட்டு மிகவும் இன்னலுக்கு ஆளாகினர்.  முதியோர், இளைஞர்கள், குழந்தைகள் முதல் மர்ம காய்ச்சலுக்கு உள்ளாகி தனியார் மருத்துவ மனைக்கும் களியாம்பூண்டி அரசு மருத்துவ மனைக்கும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த வகையான மர்ம காய்ச்சலால் கை, கால்கள் வீக்கமாகவும், மூட்டுகளில் வலியும் ஏற்படுகிறது என்றும் எழுந்து நிற்ககூட முடியாமல் அவதியுறுவதாகவும் பொதுமக்கள் கூறினர்.  மேலும் எங்கள் கிராமத்தில் போதிய மருத்துவ வசதியோ, போக்குவரத்து வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறினர்.  மர்மகாய்ச்சலால் 100-க்கு மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  தங்கள் பகுதிக்கு சுகாதார நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவ குழுவை அமைத்து மர்மகாய்ச்சலுக்கு தீர்வுகானுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

No comments