Disqus Shortname

துப்பாக்கி உரிமம் கேட்டு நரிக்குறவர்கள் மனு

உத்தரமேரூர்அக்,08
 உத்தரமேரூர் அருகே வசிக்கும் நரிக்குறவர்கள் துப்பாக்கி உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே மானாம்பதியில் 80-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வரும் துப்பாக்கிக்கு உரிமம் கொடுக்க போலீஸார் மறுப்பதாக ஆட்சியரிடம் குடும்பத்துடன் வந்து மனு அளித்தனர்.
இது குறித்து மானாம்பதியைச் சேர்ந்த நரிக்குறவர்கள் சிலர் கூறியது: "நாங்கள் பரம்பரை பரம்பரையாக துப்பாக்கிப் பயன்படுத்தி வருகிறோம்.
எங்களது அடையாளமே துப்பாக்கியும், கவட்டையும்தான். 
திருமண வயது வரும் ஆணுக்கு துப்பாக்கி உரிமம் இருந்தால்தான் பெண்வீட்டார், பெண் கொடுக்க முன்வருவர்.
துப்பாக்கிதான் எங்களது சொத்து. எனவே துப்பாக்கியைப் பயன்படுத்த போலீஸார் உரிமம் வழங்க வேண்டும் என அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments