Disqus Shortname

சாலவாக்கத்தில் அ.தி.மு.க. 42-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் அக்,19
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் சாலவாக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று அ.தி.மு.க. 42-வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய கழக அம்மா பேரவை செயலாளர் வி.முருகன் எஸ்.எம்.சீனிவாசன், சாலவாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் வனிதாமுருகன் வரவேற்றனர்.  காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்து பேசியது. ஏழை எளிய  மக்களுக்காக எம்.ஜீ.ஆர் அ.தி.மு.க,வை உருவாக்கி தி.மு.க.வை தோற்கடித்தார். அவர் விட்டு சென்ற அ.தி.மு.க.வை தமிழக முதல்வர்அம்மா கட்டி காப்பாற்றி 3 முறை முதல்வராகி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து அளித்து வருபவர்  அம்மா மட்டும் தான் ஜாதி, மத உணர்வு இல்லாத ஒரே கட்சி அ.தி.மு.க தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு உத்தரமேரூர்  தொகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லுாரி உத்தரமேரூர் பைபாஸ் சாலை 17 கோடியிலும் ஒரகாட்பேட்டை மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தவர் தமிழக முதல்வர் தான் என்று பேசினார். எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை கழக பேச்சாளர் டாக்டர் கே.கவிதா உரையாற்றினார். இக்கூட்டத்தில் தொகுதி கழக செயலாளர் கே.ஆர்.தருமன், ஒன்றிய குழு  துணைத்தலைவர் அ.ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் சுமதிகுணசீலன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஒ.வி.வரதன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டி.எம். சடையாண்டி, ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, ஒன்றிய எம்.ஜீ-ஆர். மன்ற செயலாளர் டி.தணிகைவேல், காவாம்பயிர் ஒன்றியக்குழு  உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம், மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

No comments