Disqus Shortname

உத்திரமேரூர் மத்திய கூட்டுறவு வங்கி மேளாளரை கண்டித்து கண்டன ஆர்பாட்டம்

உத்திரமேரூர் 01/06/2023
உத்திரமேரூர் ஒன்றியத்துக்குட்பட்ட 19 கிராமங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் உத்திரமேரூர் மற்றும் எடையம்புதூர் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சார்பில் சில விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க உத்திரமேரூர் கிளை காஞ்சி மத்திய கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களை காட்டி வங்கி மேலாளர் மாலதி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன்கள் வழங்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க சார்பில் உத்திரமேரூர் கிளை மத்திய கூட்டுறவு வங்கி அலுவலகம் முன்பு வங்கி மேலாளரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், கோதண்டராமன், பொருளாளர் சேரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன்கள் அனைத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும், விவசாயிகள் கடன் வழங்காமல் கால தாமதம் செய்யும் உத்திரமேரூர் கிளை மத்திய கூட்டுறவு வங்கியின் மேளாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைத்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பொறுப்பாளர் கண்ணப்பன் உட்பட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன முழுக்கமிட்டனர்.

No comments