Disqus Shortname

2 தினங்களுக்கு முன்பு காஞ்சீபுரம் அருகே பாலாறு பாலத்தின் கீழே கொலை செய்யப்பட்டவர் உத்திரமேரூர் அடையாளம் தெரிந்தது

உத்தரமேரூர் அக்,9
காஞ்சீபுரம் அருகே குருவிமலையில் உள்ள பாலாறு பாலத்தின் கீழே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதைபார்த்த பொதுமக்கள் மாகரல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பிணமாக கிடந்த வாலிபர் உடலில் கழுத்து, தலை, வயிறு மார்பு ஆகிய 12 இடங்களில் கத்தியால் சரமாரியாக வெட்டிய அடையாளம் இருந்தது.
மர்ம கும்பல் அவரை கொடூரமாக குத்திக்கொலை செய்து பாலத்தில் உடலை வீசி சென்றிருப்பது தெரிந்தது. வாலிபர் கருப்பு நிற டி–சர்ட்டும், மெருன் நிற வேட்டியும் அணிந்து இருந்தார்.
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவில்லை.காஞ்சீபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வாலிபர் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா? என்று விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உடல் முழுவதும் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதால் பெண் விவகாரத்தில் கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து கொண்டு இருந்தார்கள்.இந்நிலையில்  பிணமாக கிடந்தாவர் உத்திரமேரூரை  சேர்ந்த பெருமாள்  என்பவரின் மகன்  சதிஷ் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

No comments