Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ஆடைகள் கலைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு கொலையா தற்கொலையா போலீசார் விசாரணை

உத்திரமேரூர் 27/05/2023
உத்திரமேரூர் அடுத்த மல்லிகாபுரம் கிராமம் அருகே தையல
ந்தோப்பு ஒன்றில் சுமார் 40 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் உடலில் ஆடைகள் கலைந்த நிலையில் சிறு சிறு காயங்களோடு சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டத்தில் இறந்த நபர் உத்திரமேரூர் கோதண்டராம அய்யர் தெருவை சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் என்பவரது மனைவி பார்வதி 40 என்பதும் இவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் தனது கணவர் மோகனுடன் நேற்று முன்தினம் சண்டையிட்டு கொண்டு தனது துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் போலிசார் விசாரணையில் கூறப்படுகிறது. இதையடுத்து சடலத்தை மீட்ட உத்திரமேரூர் போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த பார்வதியின் உடல் அருகே மது பாட்டில்கள் இருந்த்தால் இவர் மது அருந்தி இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments