கனரக வாகனங்களால் வலுவிழந்தது திருமுக்கூடல் பாலம்
உத்திரமேரூர்:கல் குவாரிகளில் இருந்து, இரவு, பகலாக
இயக்கப்படுகின்ற கனரக வாகனங்களால் திருமுக்கூடல் ஆற்றுப்பாலம்
வலுவிழந்து, சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.உத்திரமேரூர்
ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது திருமுக்கூடல் கிராமம். பாலாறு,
செய்யாறு, வேகவதி ஆகிய ஆறுகள் சங்கமிக்கின்றன. இப்பகுதியில்
பாலாற்றின் குறுக்கே, பழையசீவரத்தை இணைக்க, 1 கி.மீ., சாலையில்,
கடந்த 2008ம் ஆண்டில், ஆற்றுப்பாலம் கட்டப்பட்டது.திருமுக்கூடல்,
மதுார், புள்ளம் பாக்கம், அருங்குன்றம், சிறுமையிலுார், ஆனம்பாக்கம்,
படூர், பழவேரி, அரும்புலியூர், சாலவாக்கம் உள்ளிட்ட, 20க்கும்
மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர்.
துாண்களை சுற்றி...காஞ்சிபுரத்தில் இருந்து, டி55 நெய்யாடிவாக்கம், டி55ஏ அரும்புலியூர், டி55பி சிறுமையிலுார், டி81 படூர், டி36 ஆனம்பாக்கம், டி7 நெற்குன்றம், 80 சாலவாக்கம் ஆகிய அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்தை அடுத்துள்ள, மதுார், பினாயூர், குண்ணவாக்கம், பொற்பந்தல் மற்றும் பழவேரி ஆகிய பகுதிகளில், கல்குவாரிகள் உள்ளன.
இவற்றில் இருந்து, கல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், திருமுக்கூடல் ஆற்றுப்பாலம் வழியாக செல்கின்றன. இந்த கனரக வாகனங்கள் பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
பாலத்தை தாங்கி நிற்கும் துாண்களை சுற்றி, மணல் எடுக்கப்பட்டு விட்டதால், பாலம் பலமிழந்து வருகிறது. இதனால், இப்பாலத்தில் இணைப்புகளின் இடைவெளியும் அதிகமாகி விரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள ரப்பர் சீட்களும், சேதமடைந்து வருகின்றன.
கல் குவாரியில் இருந்து...இதுகுறித்து, அப்பகுதியைசேர்ந்த உதயகுமார் கூறியதாவது:பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள, பல பாலங்கள் உறுதியாக நிற்கின்றன. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட திருமுக்கூடல் ஆற்றுப்பாலம்,பழுதடைந்து உள்ளது.
இதற்கு காரணம், இப்பகுதியை சுற்றி உள்ள கல்குவாரிகளில் இருந்து, தினமும் வாகனங்கள் இரவு, பகலாக அதிக அளவிலான லோடு ஏற்றிச்செல்வது தான். கனரக வாகனங்களில் ஏற்படும் அதிக அளவிலான லோடினால், பாலம் எடையினை தாங்காமல், அதிர்வுக்குள்ளாகிறது. எனவே, பாலம் பழுதடையாமல் பாதுகாக்க, ஆற்றுப்பாலத்திற்கு அருகே நல்ல நிலையில் உள்ள, பழைய சாலையில், லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை இயக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துாண்களை சுற்றி...காஞ்சிபுரத்தில் இருந்து, டி55 நெய்யாடிவாக்கம், டி55ஏ அரும்புலியூர், டி55பி சிறுமையிலுார், டி81 படூர், டி36 ஆனம்பாக்கம், டி7 நெற்குன்றம், 80 சாலவாக்கம் ஆகிய அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இந்த மேம்பாலத்தின் வழியாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருமுக்கூடல் கிராமத்தை அடுத்துள்ள, மதுார், பினாயூர், குண்ணவாக்கம், பொற்பந்தல் மற்றும் பழவேரி ஆகிய பகுதிகளில், கல்குவாரிகள் உள்ளன.
இவற்றில் இருந்து, கல் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், திருமுக்கூடல் ஆற்றுப்பாலம் வழியாக செல்கின்றன. இந்த கனரக வாகனங்கள் பகல் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
பாலத்தை தாங்கி நிற்கும் துாண்களை சுற்றி, மணல் எடுக்கப்பட்டு விட்டதால், பாலம் பலமிழந்து வருகிறது. இதனால், இப்பாலத்தில் இணைப்புகளின் இடைவெளியும் அதிகமாகி விரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் பாலத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள ரப்பர் சீட்களும், சேதமடைந்து வருகின்றன.
கல் குவாரியில் இருந்து...இதுகுறித்து, அப்பகுதியைசேர்ந்த உதயகுமார் கூறியதாவது:பாலாற்றில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள, பல பாலங்கள் உறுதியாக நிற்கின்றன. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட திருமுக்கூடல் ஆற்றுப்பாலம்,பழுதடைந்து உள்ளது.
இதற்கு காரணம், இப்பகுதியை சுற்றி உள்ள கல்குவாரிகளில் இருந்து, தினமும் வாகனங்கள் இரவு, பகலாக அதிக அளவிலான லோடு ஏற்றிச்செல்வது தான். கனரக வாகனங்களில் ஏற்படும் அதிக அளவிலான லோடினால், பாலம் எடையினை தாங்காமல், அதிர்வுக்குள்ளாகிறது. எனவே, பாலம் பழுதடையாமல் பாதுகாக்க, ஆற்றுப்பாலத்திற்கு அருகே நல்ல நிலையில் உள்ள, பழைய சாலையில், லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை இயக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments