Disqus Shortname

படூர் கூட்ரோட்டில் பயணியர் நிழற்குடை திறப்பு.

உத்தரமேரூர் அக்,14
உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் படூர் கிராம கூட்ரோட்டில் ரூ. 3 லட்சம்  மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை திறப்பு விழா அண்மையில் நடந்தது. காட்டாங்குளம் ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா சிட்டிபாபு வரவேற்றார். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர்  அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். உத்தரமேரூர் தொகுதி சட்ட  மன்ற  உறுப்பினர் வாலாஜபாத் பா.கணேசன் பயணியர் நிழற்குடையை திறந்து  வைத்து பேசினார். ஒன்றிய சிறுபான்மை பிரிவுசெயலாளர் ஏ.அலாவுதீன், திருவந்தவார் முருகன், மாவட்டபிரதிநிதி சுமதி குணசீலன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, தொகுதி செயலர் கே.ஆர்.தர்மன், தங்க,பஞ்சாட்சரம் ஒன்றிய  கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, பி.வில்வபதி, திருப்புலிவனம் கிளை கழக செயலாளர் கே,ரவி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டார    வளர்ச்சி அலுவலர் செ.மணிமாறன் நன்றி கூறினார்.

No comments