உத்திரமேரூர் அருகே மர்ம காய்ச்சலால் கிராம மக்கள் பாதிப்பு
உத்தரமேரூர், அக்.10-
உத்திரமேரூர் அடுத்து உள்ள ஆர்.என். கண்டிகை, நவாத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கை, கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிபடுகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்டோர் உத்திரமேரூர், மானாதிபதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
உத்திரமேரூர் அடுத்து உள்ள ஆர்.என். கண்டிகை, நவாத்தநல்லூர் ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கை, கால்கள் வீங்கி நடக்க முடியாமல் அவதிபடுகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 100-க்கு மேற்பட்டோர் உத்திரமேரூர், மானாதிபதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
No comments