Disqus Shortname

உத்திரமேரூரில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்பாட்டம்

உத்திரமேரூர் 17/08/2020
உத்திரமேரூர் தாலூக்கா அலுவலகம் எதிரே புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காஞ்சி மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து
கண்டன ஆர்பாட்டம்  நடந்தது. ஆர்பாட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சங்கரன், மாவட்ட அவைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் வளையாபதி
கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மத்திய அரசு கொண்டு
வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிப்பு தெரிவித்து, மத்திய அரசை
கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இந்த புதிய கல்விக்
கொள்கையினை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மதிமுக நிர்வாகிகள் தயாளன், பொன்னுசாமி, மணி, ரஞ்சித்குமார், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதேப் போல் உத்திரமேரூர் பஸ்
நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

No comments