குண்ணவாக்கத்தில் அம்மா திட்ட முகாம்
உத்தரமேரூர்,அக்12
உத்தரமேரூர்
தாலுக்கா குண்ணவாக்கம் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமையன்று
நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கே.பெருமாள் முன்னிலை வகித்தார்.
வட்டாட்சியர் சி.சாவித்திரி தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டாட்சியர்
ஆர்.லட்சுமிபதி வரவேற்றார். பொது மக்களிடம் இருந்து 48 மனுக்கள்
பெறப்பட்டது. 24 மனுக்கள் உடனடி தீர்வு செய்யப்பட்டது. முதியோர் ,விதவை
உதவித்தொகை 14 நபர்களுக்கு அளிக்கப்பட்டது. 17மனுக்கள் தள்ளுபடி
செய்யப்பட்டது. 7 மனுக்கள் நிலுவையில் உள்ளது, நிர்வாக அலுவலர் கே.பாலாஜி
நன்றி கூறினார்.
No comments