Disqus Shortname

உத்தரமேரூரில் பஞ்சமி நில மீட்பு விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர் செப்,05
உத்தரமேரூரில் பஞ்சமி நில மீட்பு விடுதலை சிறுத்தைகள்  கண்டன
ஆர்ப்பாட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பஞ்சமி நிலமீட்பு ஆணையத்தை
நடைமுறை படுத்திடவும், உத்தரமேரூர் வயலுார் நரிக்குறவர்  காலணியில்
வசிக்கும் நரிக்குறவர்களுக்கு குடும்ப அட்டையும் அவர்களுக்கு சேர வேண்டிய நிலத்தை மீண்டும் வழங்க கோரியும் உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராபர்ட் (எ) தி.அ.மல்லிமாறன் தலைமை தாங்கினார். ஏ.பன்னீர்செல்வம், அ.தயாளன், சூ.வின்செட், முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர் வே.கு.தமிழ்முரசு வரவேற்றார். காஞ்சி மாவட்ட செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் கண்டன உரையாற்றினார். சி.எம்.ஆனந்தன், அக்னிமு.ஆறுமுகம், அரக்கோணம் கௌதம், மு,முத்தமிழன் மற்றும் வயலுார் நரிக்குறவர் காலணி மக்கள் 76 பேர் மனைவி குழந்தைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நகர நிதி செயலாளர் ந.ம.ஆண்ரோஸ் நன்றி கூறினார்.

No comments