Disqus Shortname

உத்திரமேரூர் பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கல்

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக
கொரோனா பாதிப்பு இடங்கள் உட்பட பொது மக்கள் கூடும் அனைத்து
இடங்களிலும் தினந்தோரும் கிருமி நாசினித் தெளிக்கப்பட்டு துப்புரவு
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பேரூராட்சி
ஊழியர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று பொது மக்களுக்கு எதிர்ப்பு
சக்தி அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொது
மக்கள் இந்த கபசுரக் குடிநீரை ஆர்வத்தோடு வாங்கி பருகி வருகின்றனர்.
மேலும் பேரூராட்சி ஊழியர்கள் வீடுகளில் உள்ள அனைவருக்கும்
வெப்பமானியைக் கொண்டு உடலின் வெப்பத்தை கணக்கிடும் பணியும்
மேற்கொண்டு வருகிறது.

No comments