மணல் குவாரிகளின் அத்துமீறல் தொழிற்சாலைகளை தேடும் விவசாயிகள்
உத்திரமேரூர் அக் 21:
பினாயூர் பாலாற்றில் இயங்கிய மணல் குவாரியால், அப்பகுதியில் பாலாற்று பாசனத்தை நம்பி, விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. பினாயூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், கூலி வேலைக்கு தொழிற்சாலைகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
30 அடி ஆழத்திற்கு உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது பினாயூர் கிராமம். இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. பாலாற்று நீரை நம்பி, விவசாயம் நடந்தது. நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன.
இப்பகுதியை சுற்றியுள்ள சீதாவரம், அரும்புலியூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக் கணக்கானோர் பினாயூர் பகுதி நிலங்களில், விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.இந்நிலையில், பினாயூர் பாலாற்றங் கரையில், கடந்த ஆறு மாதங்களாக, மணல் குவாரி நடத்தப்பட்டது. குவாரியில் பின் பற்ற பட வேண்டிய விதி முறைகள், முற்றிலுமாக மீறப்பட்டு ஆற்றங்கரையோரத்தில், 30 அடி ஆழத்தில் தோண்டி மணல் அள்ளப்பட்டது. இதனால், இப்பகுதியின் இயற்கை வளம் முழுவதுமாக சூறையாடப்பட்டது.
நிலத்தடி நீர் குறைந்தது இது குறித்து, அப்பகுதி விவசாயி பாட்ஷதி கூறியதாவது:பாலாற்று படுகையில், நிலத்தடி நீரை நம்பி, நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட தோட்ட பயிர்கள் மற்றும் பூச்செடிகளையும் பயிர் செய்து வந்தோம்.தற்போது, பினாயூர் பாலாற்றில், 30 அடி ஆழத்திற்கு, தோண்டி மணல் எடுத்து விட்டதால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடுமையான வறட்சி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் இப்பகுதியில் விவசாயத்தில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள், தற்போது, விவசாயத்தை விட்டு, தொழிற்சாலைகளை தேடி அலைந்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
பினாயூர் பாலாற்றில் இயங்கிய மணல் குவாரியால், அப்பகுதியில் பாலாற்று பாசனத்தை நம்பி, விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. பினாயூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள், கூலி வேலைக்கு தொழிற்சாலைகளை தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
30 அடி ஆழத்திற்கு உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கம் அடுத்துள்ளது பினாயூர் கிராமம். இங்கு, 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக இருந்தது. பாலாற்று நீரை நம்பி, விவசாயம் நடந்தது. நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்ட பயிர்கள் பயிரிடப்பட்டன.
இப்பகுதியை சுற்றியுள்ள சீதாவரம், அரும்புலியூர், பழவேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நுாற்றுக் கணக்கானோர் பினாயூர் பகுதி நிலங்களில், விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.இந்நிலையில், பினாயூர் பாலாற்றங் கரையில், கடந்த ஆறு மாதங்களாக, மணல் குவாரி நடத்தப்பட்டது. குவாரியில் பின் பற்ற பட வேண்டிய விதி முறைகள், முற்றிலுமாக மீறப்பட்டு ஆற்றங்கரையோரத்தில், 30 அடி ஆழத்தில் தோண்டி மணல் அள்ளப்பட்டது. இதனால், இப்பகுதியின் இயற்கை வளம் முழுவதுமாக சூறையாடப்பட்டது.
நிலத்தடி நீர் குறைந்தது இது குறித்து, அப்பகுதி விவசாயி பாட்ஷதி கூறியதாவது:பாலாற்று படுகையில், நிலத்தடி நீரை நம்பி, நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட தோட்ட பயிர்கள் மற்றும் பூச்செடிகளையும் பயிர் செய்து வந்தோம்.தற்போது, பினாயூர் பாலாற்றில், 30 அடி ஆழத்திற்கு, தோண்டி மணல் எடுத்து விட்டதால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. கடுமையான வறட்சி நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால் இப்பகுதியில் விவசாயத்தில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்த இளைஞர்கள், தற்போது, விவசாயத்தை விட்டு, தொழிற்சாலைகளை தேடி அலைந்து வருகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments