புரட்டாசி 3–வது சனிக்கிழமையை முன்னிட்டு உத்தரமேரூர் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம்
உத்தரமேரூர் செப்,06
புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி உத்திரமேரூர் பெருமாள் கோவில்களில் நேற்று
சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி
தரிசனம் செய்தனர்.
புரட்டாசி 3–வது சனிக்கிழமை
உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி
சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். உத்திரமேரூர் பெருமாள் கோவிலில் நேற்று காலையில்
சுந்தரவல்லி தயாருக்கு புஷ்ப அங்கி அலங்காரம் செய்து பூஜைகள்
செய்யப்பட்டது. பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலுக்கு வந்திருந்த
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், நேற்று புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி மூலவர்
பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள்
நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
No comments