Disqus Shortname

காவாம்பயிர் பள்ளிக்கு 7 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா

உத்தரமேரூர் மார்ச்-30
உத்தரமேரூர் தாலுக்கா, காவாம்பயிர் கிராமத்தில் சனிக்கிழமையன்று
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அப்பள்ளிக்கு 7 லட்சம் மதிப்பில்
கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற
உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.  உதவித்
திட்ட அலுவலர் வி.ஞானசேகரன் முன்னிலை வகித்தார். காவாம்பயிர் ஊராட்சி
மன்றத்தலைவர் சு.குணசேகரன் அனைவரையும் வரவேற்றார்.  வட்டார வளமைய
மேற்பார்வையாளர் எ.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு,
வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ.) இரா.மில்டன்ஜான்பிரபு, உதவி தொடக்கக்
கல்வி அலுவலர் இ.பச்சையப்பன், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்
டி.விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம் உட்பட
பலர் பங்கேற்றனர்.  காவாம்பயிர் பள்ளி தலைமை ஆசிரியர் டி.ஜி.லியோ நன்றி
கூறினார்.

No comments