Disqus Shortname

ஆபத்தான நிலையில் மின் மீட்டர் பெட்டிகள்

உத்திரமேரூர்ஏப்ரல் 28:

உத்திரமேரூரில் மின் கம்பங்களின் ஆபத்தான நிலையில் உள்ள மீட்டர் பெட்டிகளை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சில மின் கம்பங்களில், பொருத்தப்பட்டு உள்ள மீட்டர் பெட்டி மற்றும் மெயின் பாக்ஸ் பழுதடைந்து, கம்பிகள் அறுந்து தொங்குகின்றன.
இப்பெட்டி திறந்த நிலையில் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன், மின்வாரிய அதிகாரிகள் இவைகளை நேரில் பார்வையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments