Disqus Shortname

கரும்பு விவசாயிகள் வட்டார ஆலோசனைக் கூட்டம்

உத்தரமேரூர் வட்டார கரும்பு விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது.
விவசாயிகளின் நலன் கருதி உத்தரமேரூர் வட்டத்தை மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் செயல்பட அரசிடம் அனுமதி பெற்றுத் தரவேண்டும். கரும்பு உற்பத்தி செய்து வெட்டி அனுப்பிய கரும்புக்கு உண்டான பணம் பட்டுவாடா செய்யாமல் தரம் பிரித்து பட்டுவாடா செய்யும் தனியார் எஸ்.வி.சர்க்கரை ஆலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட விவசாய அமைப்பாளர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். உத்தரமேரூர் தி.மு.க ஒன்றிய கழக செயலாளர் இரா.நாகன் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர். ஜி.ஞானசேகரன், கோ.தவனகிரி, கி,மனோகரன் முன்னிலை வகித்தனர். குழு நியமன உறுப்பினர்களாக உத்தரமேரூர் பேரூராட்சித் தலைவர் கு.சுமதி குணசேகரன் உட்பட 13 பேர் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் என்.எஸ்.பாரிவள்ளல் நன்றி கூறினார்.

No comments