Disqus Shortname

கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தில் 25-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா

உத்திரமேரூர் ஏப்,25

உத்திரமேரூர் கருவேப்பம்பூண்டி கிராமத்தில் உள்ள ஓம்சக்தி கீர்த்திமதி அன்னை சக்தி பீடத்தின் 25-வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா மற்றும் திருத்தேர் விழா கடந்த 2 நாட்களாக நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜை, வாஸ்து சாந்தி, யாக பூஜைகள், ரக்ஷ பந்தனம் நடத்தப்பட்டது. அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். 108 பால்குட ஊர்வலம் நடத்தி, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தினர்.

நேற்றிரவு ரத உற்சவம் மற்றும் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சிவானந்த ஜோதி, வாலாஜாபாத் கணேசன் எம்எல்ஏ, சென்னை - புதுச்சேரி பிஆர்பி டெவலப்பர்ஸ் நிர்வாகி கோவிந்தராஜ், மாருதி பில்டர்ஸ் பியாரிலால் ஜெயின், மாவட்ட ஊராட்சி தலைவர் பன்னீர்செல்வம், ஊராட்சி தலைவர் கவுரி முனுசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் ராமசாமி, வெங்கடேசன், அரிதாஸ், மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments