Disqus Shortname

அரசு கலை கல்லுாரி துவங்க உத்தர விட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து உத்தரமேரூர் எம்.எல்.ஏ.வாலாஜாபாத் பா.கணேசன் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்



உத்தரமேரூர் ஏப்,09
உத்தரமேரூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்ற கூட்டத் தொடரில் அறிவித்தார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் திங்கட்கிழமையன்று இரவு 7.00 மணி அளவில் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் உள்ள எம்.ஜீ.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து பேரூந்தில் பயணம் செய்தவர்களுக்கும்  பொதுமக்களுக்கும் லட்டுகள் வழங்கி உத்தரமேரூருக்கு கலை அறிவியல் கல்லுாரி துவங்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா வாழ்க என தொண்டர்கள் கோஷமிட்டனர். உத்தரமேரூர் ஒன்றிய கழக செயலாளர்கள்  வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொகுதி செயலாளர் கே.ஆர் தருமன் காவனுார்புதுச்சேரி கே.கே.பெருமாள் குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருவந்தவார் முருகன் மேனலுார் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.பெருமாள் வேலாயுதம், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி  அ.பி.சத்திரம் பெருமாள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

No comments