உத்தரமேரூரில் இளைஞர் காங்கிரஸ் கட்சி இலவச தண்ணீர் பந்தல் திறப்பு
உத்தரமேரூர் ஏப்,11
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் வியாழக்கிழமையன்று இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இலவச தண்ணீர் பந்தல் திறப்பு விழா
நடந்தது. இளைஞர் காங்கிரஸ் கே.கரிகாலன் தலைமை தாங்கினார். காஞ்சி மாவட்ட
காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் இலவச தண்ணீர்
பந்தலை திறந்து வைத்தார். உத்தரமேரூர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள்
ஆர்.ஜெயக்குமார் சு.சம்பத், ஏ,சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments