உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் மெட்ரிக்பள்ளி 16 வது ஆண்டு விழா
உத்தரமேரூர் ஏப்,17
உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 16 ஆம் ஆண்டு விழா
பள்ளி வளாகத்தில் திங்களன்று நடந்தது. மீனாட்சி அம்மாள் நிர்வாக அறங்காவலர்
ஏ.என்.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் மீனாட்சி அம்மாள்
முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் ஆர்.சேகர் வரவேற்று ஆண்டறிக்கை
வாசித்தார். தமிழ் நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநர் ஆர்.பிச்சை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ
மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். கடந்த ஆண்டு 10, 12, வகுப்பு
பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களை பாராட்டி பள்ளி
தாளாளர் கோமதி இராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் பிரேமாலதாகனிகண்ணன் உத்தரமேரூர்
மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கே.ராஜா நிர்வாக அலுவலர்
கே.பலராமன், தொழிற்பயிற்சி மைய ஒருஙகிணைப்பாளர் வி.இராஜேந்திரன் குளோபல்
பள்ளி முதல்வர் எஸ்.சாந்தி துணை முதல்வர் கே.மேரிஸ்டெல்லா, கே.கே.நகர் வாணி
வித்யாலயா பள்ளி முதல்வர் அருணாஅப்பாசாமி, ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
பள்ளி துணை முதல்வர் வத்சலா நன்றி கூறினார்.
No comments