Disqus Shortname

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர், ஏப்,22
உத்தரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் பகுதிக்கு உட்பட்ட ஆதவப்பாக்கம், மற்றும், வாடாதவூர் ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமையன்று பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மில்டன்ஜான்பிரபு தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதபுரி, பாஸ்கரன், முன்னிலை வகித்தனர். புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜே.மணிகண்டன் வரவேற்றார். இரண்டாம் உயர்நிலை கூட்டமைப்பின் உத்தரமேரூர் வட்டார செயலாளர் வி.கௌரி பேரணியை துவக்கி வைத்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதவப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் விமலா பிரகாசம், வாடாதவூர் ஊராட்சி மன்றத்தலைவர் எம்.ஐ-சதீஷ் செய்திருந்தனர். பேரணியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மகளிர் குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாணவ, மாணவியர் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழலால் மாசுபடுதல் புவி வெப்ப மயமாகுதல், மழைநீர் பூமிக்கு செல்லாமை  போன்ற கருத்துக்களை விலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி கோஷமிட்டு சென்றனர். இவ்விழாவில் ஆதவப்பாக்கம் கோதண்டன், ராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments