Disqus Shortname

புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் இலவச கண்பரிசோதனை முகாம்

உத்தரமேரூர் ஏப்,10
தமிழ் நாடு அரசு புதுவாழ்வு திட்ட திருப்புலிவனம் பகுதி அலுவலகத்தின்  சார்பில் டாக்டர் அகர்வால் கண் மருந்துவமனையுடன் இணைந்து கண் பரிசோதனை முகாம் மருதம் கிராமத்தில்செவ்வாய்கிழமையன்று  நடந்தது. அணித்தலைவைர் ஜே-மணிகண்டன் வரவேற்றார். முகாமில் 80 நபர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். மேல்சிகிச்சைக்காக 20 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு காஞ்சிபுரம் அழைத்து செல்லப்பட்டனர். முகாமிற்கு ஊராட்சி மன்ற  தலைவர்  மாயகிருஷ்ணன் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார். பகுதி அலுவக சிறப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பி.ராஜேஷ்குமார் சிறப்பு நன்றி கூறினார்.

No comments