Disqus Shortname

குண்ணவாக்கத்தில் 26,66 இலட்சத்தில் புதிய கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு விழா

உத்தரமேரூர் ஏப்,07
உத்தரமேரூர் தாலுக்கா குண்ணவாக்கத்தில் ரூ.26.66 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால் நடை மருந்தக கட்டிட திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் எஸ்.கோவர்தனன் வரவேற்றார். உத்தரமேரூர் தொகுதி சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத்.பா.கணேசன் முன்னிலை உரையாற்றினார். காஞ்சி மாவட்ட ஆட்சியர் எல்.சித்திரைசேனன் வாழ்த்தி  பேசினார். கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம். சின்னைய்யா  கால்நடை மருத்துவ கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட ஊராட்சி தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை பொறியாளர் பொன், சிவகுரு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மாவட்டகுழு உறுப்பினர் சுமதிகுணசீலன்  உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இர.மில்டன்ஜான்பிரபு, ஒன்றிய குழு உறுப்பினர் மகேஸ்வரி சேதுராமன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் டி.வெங்கடேசன், வட்டாட்சியர் கலைமணி, ஒன்றியகழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, மாவட்ட எம்.ஜீ.ஆர் மன்ற துணைச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி  சாலவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா முருகன்  கே.எம்.வரதராஜலு, டி.ஜீவானந்தம் டி.எம்.சடையாண்டி, கே.கே.பெருமாள், தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், சி.சுப்பிரமணியன், மேனலுார் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ். பெருமாள் வேலாயுதம் ஆதவப்பாக்கம் கோதண்டன்,  உட்பட பலர் பங்கேற்றனர்.
குண்ணவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் இ.பெருமாள் நன்றி கூறினார்.

No comments