புதுவாழ்வு திட்ட பணிகள் ஆட்சியர் ஆய்வு
உத்தரமேரூர் ஏப்,10
தமிழ்
நாடு அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான
கூட்டமைப்பின் செயல்பாடுகளை உத்தரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் பகுதிக்குட்பட்ட கருவேப்பம்பூண்டி
ஊராட்சியில் செவ்வாய்க்கிழமையன்று மாவட்ட ஆட்சியர்
எல்.சித்திரசேனன் ஆய்வு செய்தார். மாவட்ட திட்ட மேலாளர் கழுகாசலமூர்த்தி உதவி திட்ட
மேலாளர் சுபான், வட்டார வளர்ச்சி அலுவலர் மில்டன்ஜான்பிரபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.நாகமணி ஆகியோர்
உடன் இருந்தனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் கௌரிமுனுசாமி தலைமையில் புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜெ-மணிகண்டன் வரவேற்றார்.
ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் வறுமை ஒழிப்பு
சங்க வளர்ச்சிக்கு ஆலோசனை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் எம்.விஜிஸ்டி நன்றி கூறினார்.
No comments